வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 8வது நாளாக இசுலாமியர்கள் போராட்டம்.

" alt="" aria-hidden="true" />


வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 8வது நாளாக இசுலாமியர்கள் போராட்டம்.


தமிழக அரசு என்.பி.ஆர் க்கு எதிராக தீர்மானம் போடம் வரை போராட்டம் தொடரும். விடுதலை சிறுத்தை கட்சியின் இணை செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் பேட்டி.
  
வாணியம்பாடி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் இசுலாமியர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களை எதிர்ப்பு தெரிவித்தும், அதனை வாபஸ் பெற வலியுறுத்தி 8 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


" alt="" aria-hidden="true" />


போராட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் இணை செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் கலந்து கொண்டு சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய சட்டங்களுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது :-


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் மக்கள் கிளர்ச்சி வெடித்து உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் என்.பி.ஆர் க்கு எதிராக தீர்மானம் போடும் வரை இந்த போராட்டம் தொடரும். பாஜக உடன் கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் பீகார் சட்டமன்றத்தில் என்.பி.ஆர் க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார். இதே போல் தமிழக அரசு என்.பி.ஆர் க்கு எதிராக தீர்மானம் போட வேண்டும். குடியுரிமை சட்டத்தில் பாஜக அரசு கொண்டுவந்துள்ள திருத்தம், மக்கள் தொகை கணக்கெடுப்பில் வைத்துள்ள கூடுதலான கேள்விகள். இதுதான் இப்போது பிரச்சனை. அதை திரும்ப பெரும் வரை இந்த போராட்டம் தொடரும். 


டில்லியில் நடந்த வன்முறைக்கு பாஜக தான் காரணம், டில்லி காவல்துறை வேடிக்கை பார்த்துள்ளது. முஸ்லிம் கடைகளை பார்த்து சுரை ஆடுவது காவல் துறை வேடிக்கை பார்த்துள்ளது. குஜராத், மும்பை, கோவை ஆகிய நகரங்களில் கலவரம் எப்படி திட்டம்மிட்டு கலவரம் நடத்தப்பட்டதோ அதேபோல் தன டில்லியில் நடந்த வன்முறை சம்பவம். டில்லியில் நடந்தது போல் சென்னை வன்னாரப்பெட்டையிலும் நடக்கும் என்று ஹெச்.ராஜா டுவீட் போடுகின்றார். தமிழக முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் வன்முறை வெடித்தால் அதற்க்கு ஹெச்.ராஜா தான் பொறுப்பாவார். மத்திய மாநில அரசுகள் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் வன்முறை தூண்டும் பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என்றார்.


Popular posts
புதுக்கோட்டை உழவர் சந்தையை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டார்
Image
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Image
கொரோனா வைரஸானது கண்களைத் தாக்குவதாகவும், முதல் அறிகுறியாக கண்கள் சிவந்து காணப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
பண்ருட்டி மனிதநேய ஜனநாயக கட்சி அத்தியாவசியப் பொருட்கள் முதற்கட்டமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது
Image